நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், கட் ஆஃப் கணிசமாக குறையும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக நீட் தேர்வு நிபுணர் கூறிய விளக்கங்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக செயல்படுகிறது.
இந்தியா முழுவதும் சுமார் 22.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வை எழுதினர். நீட் தேர்வு 500க்கும் மேற்பட்ட நகரங்களில் 5453 தேர்வு மையங்களில் நடைபெற்றது. நீட் தேர்வு பேனா மற்றும் பேப்பர் முறையில், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் மற்றும் உயிரியியல் பாடத்தில் இருந்து 90 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 720.
இந்தநிலையில், நீட் தேர்வு முடிந்து வெளியில் வந்த மாணவர்கள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக கருத்து தெரிவிக்கின்றனர்.
Advertisment
Advertisements
இந்தநிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு கட் ஆஃப் கணிசமாக குறையும் என பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களும் அந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோவின்படி,
நீட் அகில இந்திய கவுன்சலிங் மற்றும் தமிழ்நாடு கவுன்சலிங் ஆகிய இரண்டுக்குமே கட் ஆஃப் நிச்சயம் குறையும். இதற்கு 3 காரணங்கள் உள்ளன. தேர்வு எழுதிய மாணவர்களின் கருத்துப்படி, தேர்வுக்கான கால அளவான 3 மணி நேரம் போதுமானதாக இல்லை. வினாத்தாளில் கேள்விகள் நீளமானதாக இருந்தது. மேலும் கையொப்பம் உள்ளிட்ட பிற நடைமுறைகளுக்கு 15 நிமிடங்கள் தேவைப்பட்டது.
இயற்பியல் பகுதி கடினமாக இருந்தது. குறிப்பாக 45 கேள்விகளில் 40 கேள்விகளுக்கு கால்குலேஷன் தேவைப்பட்டது.
உயிரியலில் எதிர்பாரா கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. சில கேள்விகளுக்கு விடையளிக்க அதிக நேரம் தேவைப்பட்டது.
எனவே நீட் தேர்வுக்கான கட் ஆஃப் நிச்சயம் குறையும். இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.