நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஆதார் அங்கீகாரத்தை செய்ய வலியுறுத்தி தேசிய தேர்வு முகமை தகவல் அனுப்பியுள்ளது. யாருக்கு எல்லாம் இந்த தகவல் வந்துள்ளது? ஏன் வந்துள்ளது? என்ன செய்ய வேண்டும்? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4, 2025 அன்று ஆஃப்லைன் முறையில் நடைபெறும். இது எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவ இடங்களுக்கு போட்டியிட லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் சிலருக்கு ஆதார் அங்கீகாரத்தை செய்ய வலியுறுத்தி தேசிய தேர்வு முகமை தகவல் அனுப்பியுள்ளது. யாருக்கு எல்லாம் இந்த தகவல் வந்துள்ளது? ஏன் வந்துள்ளது? என்ன செய்ய வேண்டும்? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம். இதுதொடர்பாக பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி,
ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் பிற சான்றிதழ்களை கொடுத்து, அதாவது வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான்கார்டு போன்ற வேற ஐ.டி.,களை கொடுத்து பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ஆதார் சரிப்பார்ப்பு செய்ய சொல்லி தேசிய தேர்வு முகமை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளது.
Advertisment
Advertisements
ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் பதிவு செய்துள்ளார் என்பதை சரிபார்க்க ஆதார் சரிபார்ப்பை தேசிய தேர்வு முகமை கோருகிறது.
எனவே மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி பெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ நீட் தேர்வு இணையதளத்திற்குச் சென்று, தேர்வர் உள்நுழைவு பக்கத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர் உங்கள் தனிப்பட்ட உள்நுழைவு சான்றுகளை அதாவது பயனர் ஐ.டி, பாஸ்வேர்டு மற்றும் கேப்சா ஆகியவற்றை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும். பின்னர் ஆதார் அங்கீகாரத்திற்கான தகவல்களை கொடுத்து சமர்பிக்க வேண்டும்.
ஆதார் கொடுத்து பதிவு செய்தவர்களுக்கு மின்னஞ்சல் வந்திருக்காது. அவர்கள் கவலைப்பட வேண்டாம். ஆதார் பதிவு இல்லாதவர்கள் மட்டுமே இப்போது பதிவு செய்ய வேண்டும்.