/tamil-ie/media/media_files/uploads/2023/06/MBBS-Admission.jpg)
கலந்தாய்வு (பிரதிநிதித்துவ படம்)
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET) கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி மாநில மாணவர் சேர்க்கை கமிட்டிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களுடன் கடிதம் அனுப்பியுள்ளது.
மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி நீட் தேர்வு முடிவுகள் அடங்கிய ஹார்ட் டிரைவை தேசிய தேர்வு முகமையிடம் இருந்து ஜூன் 20 ஆம் தேதி பெற்றுள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாநில சேர்க்கை கமிட்டிகளின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி நீட் தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு? உறுதியான பதிலை அறிவித்த மருத்துவ கவுன்சில்
நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங்கிற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு மாநில மருத்துவ கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது. மாணவர்கள் ஜூலை 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தநிலையில் தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகளை முடிப்பதற்கான கடைசி தேதியை அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் பட்டதாரி மருத்துவ கல்வி விதிமுறைகளின் படி, இளங்கலை மருத்துவ கல்வி வாரியத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு பிறகு சேர்க்கை நடத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கவுன்சிலிங் ஜூலை 2 வாரத்திற்குள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.