Advertisment

NEET UG 2024: நீட் தேர்வு வழக்கு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல்

நீட் தேர்வு வழக்குகள் தொடர்பான ஆகஸ்ட் 2 தீர்ப்புக்கு பின்னர் நிறைய விஷயங்கள் வெளிவந்துள்ளன; மருத்துவ மாணவர்கள் குழு மறுஆய்வு மனு தாக்கல்

author-image
WebDesk
New Update
neet students supreme court

முறைகேடு புகார் காரணமாக நீட் (NEET UG 2024) தேர்வை ரத்து செய்யக் கோரியும், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு மறு தேர்வு நடத்தக் கோரியும் மனுதாரர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மருத்துவ மாணவர்கள் குழு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: NEET UG: Review petition filed in Supreme Court challenging August 2 verdict

இந்த மனுவில், நீட் தேர்வுக்கு மறுதேர்வு இல்லை என்று தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தீர்ப்பளித்ததில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறியுள்ளனர். “புதிதாகக் கண்டறியப்பட்ட பொருள் ஆதாரம், மாநிலங்கள் முழுவதும் பரவலாக உள்ள ‘முறைமை மீறல்/முறைகேடு’ என்பதை வெளித்தோற்றமாக நிறுவுகிறது, எனவே, 02.08.2024 தேதியிட்ட ஆணையின் முதன்மை காரணமான, கசிவு/முறைகேடு செய்தவர்களை நேர்மையான மாணவர்களிடமிருந்து பிரிக்க முடியாது என்பதை சவால் செய்கிறது. இந்த மகத்தான பொது நலன் விஷயத்தில் கவனிக்கப்படாமல் இருக்க முடியாத ஒரு புதிய ஆதாரத்தின் மீது நீதித்துறைப் பிரயோகத்தை இந்த மனு அழைக்கிறது,” என்று மறுஆய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது.

"நகரம் வாரியாக தரவு பகுப்பாய்வு', மொத்தம் உள்ள 4738 தேர்வு மையங்களில், 60 குறிப்பிட்ட மையங்களில் வெற்றி பெற்ற தேர்வர்களின் சதவீதம் சுமார் 80% இருந்தது, இந்த 60 மையங்களில் நான்கு மையங்கள் 85% க்கு மேல் சாத்தியமற்ற வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளன என்பதை விளக்குகிறது. கூடுதலாக, இந்த 60 மையங்களில், 39 மையங்கள் ஒரே ஒரு நகரத்தைச் சேர்ந்தவை - சிகார், இந்த முடிவுகள் நாடு முழுவதும் பரவியிருக்க வேண்டும், மிக முக்கியமாக, அனைத்து தேசிய அளவிலான தேர்வுகளில் முன்னிலை வகிக்கு டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து வந்திருக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக, 2417 மற்ற மையங்களில் வெற்றி பெற்றவர்களின் சராசரி சதவீதம் 50%க்கும் குறைவாக இருந்தது,” என்று மறுஆய்வு மனு கூறுகிறது.

இதில், 'வினாத்தாள் கசிவு வெளியானதைத் தொடர்ந்து தொலைந்து போனதாகக் கூறப்படும் 16 செல்போன்கள் தன்பாத்தில் உள்ள குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் அலட்சியம், ஓ.எம்.ஆர் (OMR) தாள் சிக்கல்கள், வினாத்தாள் கசிவு பற்றிய கணிப்பு உள்ள பல விஷயங்கள் மனுவில் எழுப்பப்பட்டுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

NEET Exam Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment