/indian-express-tamil/media/media_files/2025/09/09/nios-2025-09-09-23-31-37.jpg)
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.ஐ.ஓ.எஸ், வழக்கமான பாடங்களுடன் திறன் மேம்பாட்டுக்கான தொழிற்படிப்புகளையும் வழங்கி வருகிறது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குப் பள்ளிப் படிப்பில் உதவுவதற்காக, தேசிய திறந்தநிலைப் பள்ளி (என்.ஐ.ஓ.எஸ் - NIOS) 5 புதிய பாடங்களை அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.ஐ.ஓ.எஸ், வழக்கமான பாடங்களுடன் திறன் மேம்பாட்டுக்கான தொழிற்படிப்புகளையும் வழங்கி வருகிறது.
என்.ஐ.ஓ.எஸ்-ன் சென்னை மண்டல இயக்குநர் திரு. வி. சந்தானம் இது குறித்துப் பேசுகையில், “படிப்பில் ஆர்வம் இல்லாத பல மாணவர்கள் விளையாட்டு அல்லது இசையில் திறமை பெற்றவர்களாக இருப்பார்கள். அத்தகைய மாணவர்களுக்குப் பள்ளிப் படிப்பை எளிதாக்க, உடல் கல்வி மற்றும் இசை சார்ந்த பாடத்திட்டங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம்” என்றார்.
அதன் முதல் கட்டமாக, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு யோகா, விளையாட்டு மேலாண்மை, உணவு தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய மூன்று பாடங்களும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு யோகா அறிவியல் மற்றும் விளையாட்டு மேலாண்மை ஆகிய இரண்டு பாடங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தால் விளையாட்டுத் திறமையுள்ள மாணவர்கள் கல்விப் படிப்பை எளிதாக முடித்து, தங்களின் திறமைகளில் மேலும் கவனம் செலுத்த முடியும். இந்தப் புதிய பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. இது விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்திற்கு ஒரு புதிய பாதையை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us