NIRF Rankings 2025: திறந்தநிலைப் பல்கலை.யில் இக்னோ மீண்டும் முதலிடம்

கடந்த ஆண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் இருந்த நேதாஜி சுபாஷ் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவை இம்முறை இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

கடந்த ஆண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் இருந்த நேதாஜி சுபாஷ் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவை இம்முறை இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

author-image
WebDesk
New Update
NIRF rankings 2025 IGNOU Open University

NIRF Rankings 2025: IGNOU tops list of universities for open-learning in India

இந்திய கல்விச் சூழலில், தொலைதூரக் கல்வி மற்றும் இணையவழிப் படிப்புகள் புதிய பாய்ச்சலை அடைந்திருக்கின்றன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில், மாணவர்களின் கல்வித் தேடலை எளிதாக்கியதில் திறந்தநிலை பல்கலைக்கழகங்களுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. இந்த வளர்ச்சியை அங்கீகரிக்கும் விதமாக, தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) கடந்த ஆண்டு முதல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களுக்கான தனிப் பிரிவை உருவாக்கி, தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

Advertisment

சமீபத்தில் வெளியான என்.ஐ.ஆர்.எஃப். 2025 தரவரிசைப் பட்டியலில், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் மீண்டும் ஒருமுறை முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டு பெருமை சேர்த்திருக்கிறது இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU). டெல்லியில் உள்ள இந்தப் பல்கலைக்கழகம், அதன் நிலையான தரத்துக்காகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு பட்டியலில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த பல்கலைக்கழகங்களின் விவரம் இதோ:

1வது இடம்: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU), புது டெல்லி

Advertisment
Advertisements

2வது இடம்: கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம், மைசூரு, கர்நாடகா

3வது இடம்: உ.பி. ராஜரிஷி டாண்டன் திறந்தநிலை பல்கலைக்கழகம், அலகாபாத், உத்தரப் பிரதேசம்

கவனிக்கத்தக்க வகையில், கடந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்த கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகியவை இந்த ஆண்டு பட்டியலில் இல்லை. இந்தப் புதிய மாற்றங்கள், திறந்தநிலை கல்வித் துறையில் தொடர்ந்து போட்டி அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

பொதுவாக, பொறியியல், மருத்துவம் போன்ற பாரம்பரிய படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் மாணவர்களின் முதல் தேர்வாக இருந்தாலும், கல்விக்கான அணுகலை ஜனநாயகப்படுத்தியதில் திறந்தநிலை பல்கலைக்கழகங்களின் பங்கு மிகப்பெரியது. இந்த நிறுவனங்கள், தொலைதூரப் பகுதியினருக்கும், பணிபுரிபவர்களுக்கும், வழக்கமான வகுப்புகளுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும் கற்றலுக்கான கதவுகளைத் திறக்கின்றன.

ஒட்டுமொத்த தரவரிசை: சென்னை ஐஐடி, ஐஐஎஸ்சி பெங்களூரு, ஐஐடி பம்பாய், ஐஐடி டெல்லி மற்றும் ஐஐடி கான்பூர் ஆகியவை தொடர்ந்து இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, சென்னை ஐஐடி பத்தாவது ஆண்டாக பொறியியல் பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

கல்வித் துறை வேகமாக மாறிவரும் இக்காலத்தில், கல்விக்கான விருப்பங்கள் விரிவடைந்துள்ளன. மாணவர்கள் தங்களது தேவைக்கேற்ப, பாரம்பரிய அல்லது தொலைதூரக் கல்வியைத் தேர்ந்தெடுத்து, தங்கள் கனவுகளை நோக்கிப் பயணிக்க இந்தத் தரவரிசைகள் உதவுகின்றன.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

Education

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: