மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு (NEET-UG) தொடர்பான சந்தேகத்திற்கிடமான கூற்றுகளைப் புகாரளிக்க தேசிய தேர்வு முகமை (NTA) சனிக்கிழமை ஒரு பிரத்யேக தளத்தை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
முறைகேடுகளில் ஈடுபடும் மற்றும் தவறான கூற்றுக்களால் தேர்வர்களை ஏமாற்ற முயற்சிக்கும் நேர்மையற்ற நபர்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமை தேர்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு தேர்வில் வினாத்தாள் கசிவு உட்பட பல முறைகேடுகளைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
“நீட் வினாத்தாளை அணுகுவதற்கான உரிமை கோரும் அங்கீகரிக்கப்படாத வலைத்தளங்கள் அல்லது சமூக ஊடக கணக்குகள்; தேர்வு உள்ளடக்கத்தை அணுகுவதற்கான உரிமை கோரும் நபர்கள் மற்றும் தேசிய தேர்வு முகமை அல்லது அரசு அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்பவர்கள் என மூன்று பிரிவுகளில் வரும் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளையும் தேர்வர்கள் புகாரளிக்கலாம்,” என்று தேசிய தேர்வு முகமை இயக்குநர் ஜெனரல் பிரதீப் சிங் கரோலா கூறினார்.
"அறிக்கையிடல் படிவம் எளிமையானது மற்றும் பயனர்கள் தாங்கள் கவனித்ததை, எங்கு, எப்போது நிகழ்ந்தது என்பதை விவரிக்கவும், துணைக் கோப்பைப் பதிவேற்றவும் அனுமதிக்கிறது. இந்த முயற்சி பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம், 2024 உடன் ஒத்துப்போகிறது, இது பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற நடைமுறைகளை அகற்றி, தேர்வர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது," என்று ஜெனரல் பிரதீப் சிங் கரோலா கூறினார். நீட் தேர்வு மே 4 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நீட் தேர்வெழுதுபவர்களின் எண்ணிக்கைக்கும் மருத்துவ படிப்புகளில் கிடைக்கும் இடங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்து, நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ இடங்களை கணிசமாக அதிகரிக்குமாறு கர்நாடக அரசு புதன்கிழமை தேசிய மருத்துவ ஆணையத்தை (NMC) வலியுறுத்தியது.
ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (SABVMC) 2019 தொகுதியின் பட்டமளிப்பு விழாவில் பேசிய மருத்துவக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல், ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள், ஆனால் சுமார் ஒரு லட்சம் மருத்துவ இடங்கள் மட்டுமே உள்ளன என்றார்.
"இந்த ஏற்றத்தாழ்வுக்கு உடனடி கவனம் தேவை. இந்தியாவில் நாங்கள் பயிற்சி அளிக்கும் மருத்துவர்கள் நம் நாட்டிற்கு மட்டுமல்ல, உலகிற்கும் உரியவர்கள்," என்று சரண் பிரகாஷ் பாட்டீல் கூறினார், மேலும் உலகளவில் இந்திய மருத்துவ நிபுணர்களுக்கான கடுமையான பயிற்சி மற்றும் அதிக தேவையையும் சரண் பிரகாஷ் பாட்டீல் சுட்டிக்காட்டினார்.
கூடுதல் தகவல்கள்: பி.டி.ஐ