நீட் தேர்வு வினாத்தாள் கிடைப்பதாக கூறும் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் சேனல்கள்; என்.டி.ஏ புகார்

NEET UG 2025: நீட் தேர்வு வினாத்தாள் கிடைப்பதாகக் கூறும் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் சேனல்களை அடையாளம் கண்ட தேசிய தேர்வு முகமை; நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை

NEET UG 2025: நீட் தேர்வு வினாத்தாள் கிடைப்பதாகக் கூறும் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் சேனல்களை அடையாளம் கண்ட தேசிய தேர்வு முகமை; நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
neet paper leak ai

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் நீட் (NEET-UG) தேர்வுக்கு முன்னதாக, வினாத்தாளை "அணுக" முடியும் (வினாத்தாள் கசிந்துள்ளது, இந்த தளத்தில் கிடைக்கும்) என்று கூறுகின்ற டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் சேனல்களை தேசிய தேர்வு முகமை (NTA) அடையாளம் கண்டுள்ளது, மேலும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்துடன் (I4C) மேலும் நடவடிக்கை எடுக்க விவரங்களைப் பகிர்ந்துள்ளது.

Advertisment

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

தேர்வு தொடர்பாக "சந்தேகத்திற்குரிய கூற்றுக்களை" பயனர்கள் புகாரளிக்க கடந்த வார இறுதியில் தொடங்கிய ஆன்லைன் போர்டல் மூலம் பெறப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில் நிறுவனம் செயல்பட்டு வருவதாக தேசிய தேர்வு முகமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "தவறான தகவல்களைப் பரப்புவதிலும் மாணவர்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதிலும்" ஈடுபட்டுள்ள 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சேனல்களை தேசிய தேர்வு முகமை அடையாளம் கண்டுள்ளது.

இந்த சேனல்களை உடனடியாக அகற்றவும், இந்த சேனல்களின் நிர்வாகிகளின் விவரங்களை விசாரணைக்காக சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் தேசிய தேர்வு முகமை டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராமை கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment
Advertisements

இதுவரை, தேசிய தேர்வு முகமை அதன் ஆன்லைன் போர்டல் மூலம் மொத்தம் 1,500 சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து புகார்களைப் பெற்றுள்ளது. தேசிய தேர்வு முகமை வட்டாரங்களின்படி, இந்த அறிக்கைகளில் பெரும்பாலானவை டெலிகிராம் சேனல்களில் "போலி வினாத்தாள்க் கசிவு கதைகளைத் தூண்டுவதாக" உள்ளன.

ஏப்ரல் 26 ஆம் தேதி அமைக்கப்பட்ட தேசிய தேர்வு முகமை வலைத்தளத்தில் உள்ள ஆன்லைன் போர்டல், பயனர்கள் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை மூன்று பிரிவுகளின் கீழ் புகாரளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது – நீட் தேர்வு வினாத்தாளை அணுகுவதாகக் கூறும் அங்கீகரிக்கப்படாத வலைத்தளங்கள்/சமூக ஊடக கணக்குகள், தேர்வு தொடர்பான உள்ளடக்கத்தை அணுகுவதாகக் கூறும் நபர்கள் மற்றும் தேசிய தேர்வு முகமை அல்லது அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்பவர்கள். தேர்வு நாளான மே 4 ஆம் தேதி மாலை 5 மணி வரை பயனர்கள் சந்தேகத்திற்கிடமான கோரிக்கைகளைப் புகாரளிக்கலாம்.

நீட் தேர்வு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேசிய தேர்வு முகமை மற்றும் கல்வி அமைச்சகம் இந்த ஆண்டு எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த போர்டல் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அரசு விமர்சனத்திற்கு உள்ளானது. வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையில் ஜார்க்கண்டில் உள்ள ஒரு தேர்வு மையத்திலிருந்து வினாத்தாள்கள் திருடப்பட்டு, விடைகள் கண்டறியப்பட்டு, பணம் கொடுத்த தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.

இதன் விளைவாக, இந்த ஆண்டு தேர்வு கடுமையான கண்காணிப்பின் கீழ் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பாதுகாப்பு நெறிமுறையில் வினாத்தாள்கள் மற்றும் ஓ.எம்.ஆர் (OMR) தாள்களை கொண்டு செல்லும் போது போலீஸ் பாதுகாப்பும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் தேர்வு மையங்களை ஆய்வு செய்வதும் அடங்கும். தேர்வின் தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பை நிர்வகிக்க மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, இதுபோன்ற பொதுத் தேர்வுகளை சுமூகமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க, முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கைகள் உள்ளன.

பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம், அதன் கீழ் குற்றங்களுக்கு தண்டனையை பரிந்துரைக்கிறது, அது கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NEET Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: