Advertisment

அரசு வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 12 ஆம் வகுப்பு டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn govt jobs

அரசு வேலைவாய்ப்பு

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பாதுகாப்பு அலுவலர், சமூகப் பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சென்னை பல்கலை. வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

பாதுகாப்பு அலுவலர் (Protection Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Degree in Social Work/ Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health/ Community Resource Management படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 01.08.2023 அன்று 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 27,804

சமூகப் பணியாளர் (Social Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.A in Social Work/ Sociology/ Social Sciences படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.08.2023 அன்று 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,536

உதவியாளர் (Outreach Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.08.2023 அன்று 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,592

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2023/08/2023082191.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : District Child Protection Officer, District Child Protection Unit, No. 164, 2nd Floor, M.M Plaza, Trichy Main Road, Perambalur - 621212

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.09.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2023/08/2023082191.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs Perambalur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment