பெரம்பலூர் மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகில் இளம் வல்லுநர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.01.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Young Professional
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor of Engineering in Computer Science/ Information Technology. (or) Bachelor's Degree in Data Science and Statistics (or) Master's Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 50,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2025/01/2025012149.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: புள்ளி இயல் துணை இயக்குனர், மாவட்ட புள்ளியியல் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், பெரம்பலூர் - 621212
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.