சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; ரூ.27000 சம்பளம்; டிகிரி முடித்தவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க!

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; ரூ.27,000 சம்பளம்; யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்? தேர்வு முறை என்ன? என்பன உள்ளிட்ட முழுவிபரம் இங்கே

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; ரூ.27,000 சம்பளம்; யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்? தேர்வு முறை என்ன? என்பன உள்ளிட்ட முழுவிபரம் இங்கே

author-image
WebDesk
New Update
tn govt jobs

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் நன்னடத்தை அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

பாதுகாப்பு அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

Advertisment

கல்வித் தகுதி: சமூகப் பணி/ சமூகவியல்/ குழந்தை மேம்பாடு/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநல மருத்துவம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 27,804

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: எல்.எல்.பி பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 27,804

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://perambalur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்தப் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுபா வளாகம் எண்: 106F/7, தரைத்தளம், அன்னை நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, பெரம்பலூர் - 621212

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.09.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Perambalur Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: