நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் சாதனை படைத்துள்ளார்.
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நிழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் முதல் முறையாக நீட் தேர்வை எழுதி 720-க்கு 720 மதிப்பெண்களை எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தை சேர்ந்த பிரபஞ்சன் சென்னையில் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்ததுடன், நீட் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இவரது பெற்றோர் செஞ்சியில் அரசுப் பள்ளி ஆரிசியர்களாக உள்ளனர். தனியார் பள்ளியில் படித்த இவர் நல்ல மதிப்பெண்களை எடுத்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக அவர் பேசியதாவது “ நான் இந்த ஆண்டு 12ம் வகுப்பு எழுதேன். முதல் முறையாக நீட் தேர்வு எழுதினேன். இந்நிலையில் சிறு வயதிலிருந்து மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும்போது, உயிரியல் பாடம் பிடித்தது. இதனால் மருத்துவம் படிக்க வேண்டும் என்று முயற்சித்தேன்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“