பிளஸ் 2 பொதுத் தேர்வு: 30 பக்கங்களில் முதன்மை விடைத்தாள் வழங்க உத்தரவு

வருகிற பிளஸ் 2 பொது தேர்வில், 30 பக்கங்களில் முதன்மை விடைத்தாள் வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வருகிற பிளஸ் 2 பொது தேர்வில், 30 பக்கங்களில் முதன்மை விடைத்தாள் வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
plus 2 exam

30 பக்கங்களில் முதன்மை விடைத்தாள் வழங்க உத்தரவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதில், பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது.  மாணவர்களும் பொதுத் தேர்வுக்க்காக தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட், பிப்ரவரி மாதக் கடைசியில் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கு, மாவட்ட வாரியாக முதன்மை காலி விடைத்தாள் கட்டுகள், தேர்வுத்துறையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. இந்த விடைத்தாள் கட்டுகளில், பாட வாரியாக விடைத்தாள்களை பிரித்து, அதை மாணவர்களுக்கு வழங்கும் வகையில், தயாரிப்பு பணி மேற்கொள்ள அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, உயிரி தாவரவியல், உயிரி விலங்கியலுக்கு, தலா, 14 பக்கங்களிலும், மொழிப் பாடங்கள் மற்றும் பிற பாடங்களுக்கு, தலா, 30 பக்கங்களிலும் முதன்மை விடைத்தாள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இவை தவிர, புவியியலுக்கு ஒரு உலக வரைபடம், வரலாற்றுக்கு ஒரு இந்தியா மற்றும் உலக வரைபடம், புள்ளியியல், வணிக கணிதம் பாடங்களுக்கு, கிராஃப் தாள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Plus 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: