/tamil-ie/media/media_files/uploads/2018/10/h3-8.jpg)
பிளஸ் 2 துணை தேர்வு
பிளஸ் 2 துணை தேர்வுக்கான முடிவுகள் இன்று (31.10.18) வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாகவே மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள்:
அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதுக் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பில், செப்டம்பர் மற்றும் அக்டோபரில், துணை தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று (31.10.18) தேர்வு முடிவு வெளியாகுகின்றன.
தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை இன்று பிற்பகல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கமும் செய்துக் கொள்ள முடியும். அசல் சான்றிதழ்கள் அளிக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
அதே போல், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, நாளை (1.11.18) காலை, 11:00 மணி முதல், நவ., 2 மாலை, 5:45 மணி வரை விண்ணபிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடத்துக்கு ரூ. 550 வீதமும், பிற பாடங்களுக்கு தலா ரூ. 275 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மொழிப் பாடங்கள் மற்றும் உயிரியல் பாடத்துக்கு தலா ரூ.305 வீதமும், பிற பாடங்களுக்கு ரூ. 205 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.