/indian-express-tamil/media/media_files/LqZxjGNkZi4XJUKunVx5.jpeg)
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளை படிக்க விரும்புகிறீர்களா? விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை டிப்ளமோ மேற்படிப்பு பயில விரும்பும் மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு வருகிற 26 ஆம் தேதி (மே மாதம்) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது .
இது குறித்து இன்று பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;
ஆன்லைனில் முதுகலை பட்ட மேற்படிப்பு மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பி.ஜி மற்றும் பி.ஜி. டிப்ளமோ படிப்புகளுக்கு CUET (PG) - 2024 தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் மே 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கடைசி தேதியை புதுச்சேரி பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. இந்த வாய்ப்பு விண்ணப்பத்தை முடிக்க முடியாத அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
புதிய விண்ணப்பதாரர்களாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் CUET (PG) – 2024 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், தேவைப்படும் தகுதி அளவுகோல் அடிப்படையிலும் பல்வேறு முதுகலை பட்டயப் படிப்புகள் மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான ஆன்லைன் இணைப்பு இங்கே கிடைக்கிறது: https://www.pondiuni.edu.in/admissions-2024-25/.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.