/tamil-ie/media/media_files/uploads/2023/07/Ponmudi-1-1.jpg)
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி
பொதுப் பாடத்திட்டத்தை மாற்ற உயர் கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாவது, பொது பாடத்திட்டத்தை கல்லூரி முதல்வர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். பொது பாடத்திட்டத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அனைவரிடமும் ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்பட்டது. இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்லூரிகளை நடத்தும் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும். இதில் எந்த பிரச்சனையும் இல்லை.
இதையும் படியுங்கள்: மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்; பெற்றோர்களுக்கு அன்பில் மகேஷ் வேண்டுகோள்
பொதுப்பாடத்திட்டத்தை மாற்ற உயர் கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது. உயர்கல்வியின் வளர்ச்சியே எங்கள் நோக்கம். கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுத்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன்.
பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் இதுவரை 16,516 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கல்வி வளர்ச்சி என்பது எண்ணிக்கையில் மட்டுமே உயர்த்தப்படுவதில்லை. கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். நான் முதல்வன் திட்டம் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்தி வருகிறோம். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.