Advertisment

புதுச்சேரி: 357 இளநிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு

மொத்தம் 357 இளநிலை எழுத்தர்களுக்கான அடாக் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு, அவர்கள் உதவியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
aucoe.annauniv.edu,

பதவி உயர்வு பெற்றவர்கள் வரும் 22ஆம் தேதிக்குள் பணியிடம் மாற்றப்பட்ட துறைகளில் சேர வேண்டும்.

 puducherry | புதுவை அரசுத் துறைகளில் இளநிலை எழுத்தர்களுக்கான பதவி உயர்வுத் தோ்வில் தேர்ச்சி பெற்ற 357 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

புதுவை மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர்கள் பணியிடத்துக்கு இளநிலை எழுத்தர்களாக உள்ளவர்களை தேர்வு மூலம் நியமிக்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் தகுதியான இளநிலை எழுத்தர்கள் தேர்வு எழுதினர். இதில் வெற்றிப் பெற்றவர்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் தற்போது அவர்களுக்கான உதவியாளர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Advertisment

மொத்தம் 357 இளநிலை எழுத்தர்களுக்கான அடாக் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு, அவர்கள் உதவியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வு பெற்றவர்கள் வரும் 22ஆம் தேதிக்குள் பணியிடம் மாற்றப்பட்ட துறைகளில் சேர வேண்டும் என சார்பு செயலர் ஜெய்சங்கர் உத்தரவிட்டு உள்ளார்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment