Advertisment

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி - தேர்வு நேரம் அதிகரிப்பு

School education department : 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் 3 மணி நேரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிளஸ் 2 தேர்வுகள் இன்று தொடக்கம்: தேர்வு பணி ஆசிரியர்களும் செல்போன் வைத்திருக்க தடை

10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் 3 மணி நேரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். இதில் கடந்த காலங்களில் பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு 2.30 மணி நேரம் கால அவகாசமாக வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பொதுத் தேர்வு எழுத மூன்று மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்டத்தினால் பொதுத் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment