இளங்கலை மருத்துவப் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதி வரை காலக்கெடுவை சென்டாக் நிர்வாகம் நீட்டித்துள்ளது.
இதுதொடர்பாக சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் (பல் மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ். (ஆயுர்வேதம்), கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஜூலை 28 -ஆம் தேதி முதல் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி, மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனா்.
இந்த நிலையில், விண்ணப்பிக்க இன்று இறுதி நாளாக சென்டாக் அறிவித்திருந்தது. அதேநேரம், 1,300-க்கும் மேற்பட்டோர் வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்காமல் உள்ளனர். ஆகவே, அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கும் வகையில், வரும் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“