முதுநிலை மருத்துவ படிப்பான எம்.டி., எம்.எஸ்., படிப்பிற்கு சென்டாக் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்டாக் மூலம், எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் கவுன்சிலிங் நடத்தி வருகிறது. முதல் சுற்று கவுன்சலிங் நிறைவடைந்து, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்த தயாராகி வருகிறது.
இந்நிலையில், எம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீண்ட காலமாக கவுன்சிலிங் நடத்தாமல் இருந்தது. அதனை அடுத்து, இந்த படிப்புகளுக்கு 2024 -25 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்டாக் அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் சென்டாக் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“