/indian-express-tamil/media/media_files/AVY5V9SEuYtYVqM0SrGx.jpg)
புதுச்சேரியில் முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் மருத்துவ படிப்பில் 40 இடங்கள் காலியாக உள்ளன. எனவே காலியிடங்களின் பட்டியலை சென்டாக் உடனடியாக ஆன்லைனில் வெளியிட வேண்டும் என மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி சென்டாக் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்தி வருகிறது. முதற்கட்ட கலந்தாய்விற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 386 இடங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளது.
அதன்படி சென்டாக் நிர்வாகம் அரசு, தனியார் மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
மருத்துவ சேர்க்கை கமிட்டி 2-ம் கட்ட கலந்தாய்விற்கான பட்டியலை வருகிற 29 ஆம் தேதி வெளியிட உள்ளது. அதில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி இடங்களும், அகில இந்திய அளவில் காலியாக உள்ள இடங்களும் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
எனவே காலியிட விவரங்களை சென்டாக் நிர்வாகம் வெளியிட வேண்டும் என்று புதுச்சேரி மாநில மாணவர் - பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.