/indian-express-tamil/media/media_files/AVY5V9SEuYtYVqM0SrGx.jpg)
புதுச்சேரி சென்டாக் மருத்துவ படிப்பிற்கான இறுதி தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் புதுச்சேரியைச் சேர்ந்த 57 மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு சென்டாக் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இன்று இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு 1585 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இட ஒதுக்கீடு வாரியாக பொது பிரிவு - 465, எம்.பி.சி - 110. முஸ்லிம் - 55, மீனவர் - 77 எஸ்.சி - 241, எஸ்.டி., -2 இ.டபுள்யூ.எஸ் - 17, முன்னாள் ராணுவ வீரர் வீரர் - 45 மாற்றுத்திறனாளி - 3, விடுதலை போராட்ட வீரர் - 80 பேர் இட பெற்றுள்ளனர்.
மேலும், சென்டாக் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ தரவரிசை பட்டியலை தனியாக வெளியிட்டது. இதில், அரசு பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்தமாகவே 29 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளதால் மருத்துவ இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கில் புதுச்சேரி ஜிப்மரில் சீட் கிடைத்து, சென்டாக் கவுன்சலிங்கிற்கு விண்ணப்பித்து இருந்த 57 மாணவர்களை இறுதி தரவரிசைப் பட்டியலில் இருந்து சென்டாக் நீக்கியுள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.