ஒரே நாளில் இரு அரசு தேர்வுகள்; புதுச்சேரி எல்.டி.சி தேர்வு தேதியை மாற்றக் கோரிக்கை

புதுச்சேரியில் எல்.டி.சி.தேர்வும் தட்டச்சு தேர்வும் ஒரே தேதியில் வருவதால் எல்.டி.சி. தேர்வு தேதியை மாற்றி வைக்க வேண்டும்; கல்வியாளர்கள் கோரிக்கை

புதுச்சேரியில் எல்.டி.சி.தேர்வும் தட்டச்சு தேர்வும் ஒரே தேதியில் வருவதால் எல்.டி.சி. தேர்வு தேதியை மாற்றி வைக்க வேண்டும்; கல்வியாளர்கள் கோரிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Exam

Exam

எல்.டி.சி.தேர்வும் தட்டச்சு தேர்வும் ஒரே தேதியில் வருவதால் எல்.டி.சி. தேர்வு தேதியை மாற்றி வைக்க வேண்டும் என கல்வியாளர் வி.சி.சி.நாகராஜன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

முதலியார்பேட்டை விவேகானந்தர் கோச்சிங் சென்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்வியாளர் வி.சி.சி. நாகராஜன், புதுவை அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்க தக்கதாகும். மேல்நிலை எழுத்தர் தேர்வு நேர்மையாக நடத்தி தேர்வாளர்கள் அறிவிக்கபட்டுள்ளது பாராட்டுக்குரியது.

இதையும் படியுங்கள்: புதுச்சேரி அரசில் 210 எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் பணியிடங்கள்; தேர்வு தேதி அறிவிப்பு

இந்நிலையில், தற்போது எல்.டி.சி. பணிக்கான தேர்வு தேதி ஆகஸ்ட் மாதம் 27 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே ஆகஸ்ட் 27 ஆம் தேதி தட்டச்சு தேர்வும் நடைபெற உள்ளது. இதனால் தேர்வு எழுதும் மாணவ-மாணவியர் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சிரமத்தை சரி செய்யும் வகையில் அரசு எல்.டி.சி. தேர்வு தேதியை மாற்றி வைக்க வேண்டும். இவ்வாறு மாற்றி வைக்கும் போது எல்.டி.சி. தேர்வினையும் தட்டச்சு தேர்வையும் மாணவ-மாணவியர் சிரமமின்றி எழுதி வெற்றிபெற வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisment
Advertisements

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: