ட்ரோன் டெக்னீஷியன் பயிற்சி; விண்ணப்பிக்க புதுச்சேரி அரசு ஐ.டி.ஐ அழைப்பு

புதுச்சேரி அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ட்ரோன் டெக்னீஷியன் பயிற்சி; ஜனவரி 22 வரை விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரி அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ட்ரோன் டெக்னீஷியன் பயிற்சி; ஜனவரி 22 வரை விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
தடுப்பூசி விநியோகத்திற்கு ட்ரோன்கள்; ஐ.சி.எம்.ஆர் மற்றும் தெலுங்கானாவின் புதிய திட்டம்

புதுச்சேரி அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ட்ரோன் டெக்னீஷியன் பயிற்சி; ஜனவரி 22 வரை விண்ணப்பிக்கலாம்!

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள ட்ரோன் டெக்னீஷியன் பயிற்சி பிரிவுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் அரசு ஐ.டி.ஐ., உள்ளது. அங்கு ட்ரோன் டெக்னீஷியன் புதிய தொழில் பயிற்சி பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஐ.டி.ஐ.,யில் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் வரும் 22ம் தேதி ஆகும். இந்த தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6 மாத பயிற்சியில், கண்காணிப்பு, நில அளவை, விவசாய இடுபொருள் தெளிப்பு, புகைப்படம் எடுத்தல், மற்றும் படப்பிடிப்பு, ட்ரோன் உபகரணங்களை ஒன்றிணைத்தல், பழுதுபார்த்தல், பராமரித்தல் உள்ளிட்டவை பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Puducherry drone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: