எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையில் 165 இளநிலை எழுத்தர் (எல்.டி.சி) மற்றும் 55 ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. இதற்கு புதுவையை பூர்வீகமாக கொண்டவர்கள் தகுதியுடையவர்கள்.
இதையும் படியுங்கள்: தேசிய கல்விக் கொள்கை மூலம் தொழில் சார்ந்த படிப்புகளையும் கற்பித்து வருகிறோம்; புதுச்சேரி கே.வி பள்ளி முதல்வர்
இளநிலை எழுத்தர் (LDC)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 165
காலியிட விவரம்
பொது - 67,
EWS - 16,
எம்.பி.சி - 30,
ஓ.பி.சி - 18,
இ.பி.சி - 3,
பி.சி.எம் - 3,
பி.டி - 1,
எஸ்.சி - 26,
எஸ்.டி - 1
165
ஸ்டோர் கீப்பர் நிலை-3
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 55
காலியிட விவரம்
பொது - 24,
EWS - 5,
எம்.பி.சி - 9,
ஓ.பி.சி - 6,
இ.பி.சி - 1,
பி.சி.எம் - 1,
எஸ்.சி - 8,
எஸ்.டி - 1
இந்நிலையில் எல்.டி.சி மற்றும் ஸ்டோர் கீப்பர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எல்.டி.சி மற்றும் ஸ்டோர் கீப்பர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான எழுத்துத்தேர்வு வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெறும். ஹால் டிக்கெட் பதிவிறக்கம், தேர்வு நடைபெறும் இடங்கள் போன்றவை விரைவில் அறிவிக்கப்படும்.
எழுத்து தேர்வுக்கான கேள்விகள் 12ம் வகுப்பு தரத்தில் இருக்கும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாளுடன் 2 மணி நேரம் தேர்வு நடைபெறும். கணிதம், அறிவியல், ஆங்கிலம், இந்திய வரலாறு, புவியியல், இந்திய பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil