புதுச்சேரி அரசு யூ.டி.சி தேர்வு; 136 இடங்களுக்கு 46000 பேர் போட்டி

புதுச்சேரி அரசில் பணிபுரிவதற்கான யூ.டி.சி தேர்வு 133 மையங்களில் நடைபெற்றது; 136 இடங்களுக்கு 46000 பேர் போட்டி

புதுச்சேரி அரசில் பணிபுரிவதற்கான யூ.டி.சி தேர்வு 133 மையங்களில் நடைபெற்றது; 136 இடங்களுக்கு 46000 பேர் போட்டி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Exam

Exam

புதுச்சேரி அரசு துறையில் பணிபுரிய யூ.டி.சி பதவிக்கான நுழைவுத் தேர்வு இன்று நடத்தப்பட்டது .136 பணியிடங்களுக்கு 46,000 ஆயிரம்  பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் யூ.டி.சி.,பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று (ஜூலை 23) காலை 10 மணிக்கு துவங்கியது. இதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் டவுன்லோட் செய்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்: ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

publive-image
Advertisment
Advertisements

இத்தேர்வு புதுச்சேரி -107; காரைக்கால்-13; ஏனாம்-8; மாகி-5 என மொத்தம் 133 மையங்களில் நடத்த அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் காலை எட்டு முப்பது மணி முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இத்தேர்வு நடத்தப்பட்டது. அதன் பின்பு பல்வேறு காரணங்களால் தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பின்பு தேர்வு இன்று நடக்கிறது.

136 பணிகளுக்கு 46 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 700க்கும் மேற்பட்ட ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்யப்படாததால் மாணவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry Exams

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: