Advertisment

புதுச்சேரி சுகாதாரத் துறை வேலை; தேர்வு தேதி அறிவிப்பு

புதுச்சேரி சுகாதரத்துறையில் அறுவைச் சிகிச்சைக் கூட உதவியாளர்கள், காவல் துறையின் ஓட்டுநர் பணியிடங்கள்; எழுத்துத் தோ்வுக்கான தேதி அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Exam

புதுச்சேரி சுகாதரத்துறையில் அறுவைச் சிகிச்சைக் கூட உதவியாளர்கள், காவல் துறையின் ஓட்டுநர் பணியிடங்கள்; எழுத்துத் தோ்வுக்கான தேதி அறிவிப்பு

புதுச்சேரி சுகாதாரத்துறையில் காலியாக உள்ள அறுவைச் சிகிச்சைக் கூட உதவியாளர்கள், காவல் துறை ஓட்டுநர் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisment

புதுச்சேரி பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுவை சுகாதாரத்துறையில் அறுவைச் சிகிச்சைக் கூட உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதற்கான எழுத்துத் தேர்வு வரும் 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை காவல் துறை ஓட்டுநர், நிலை 3 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளன.

இந்த தேர்வுகள் புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான அனுமதிச்சீட்டை சம்பந்தப்பட்ட துறை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Puducherry Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment