Advertisment

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கான பயிற்சி; பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அழைப்பு

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 3 ஆண்டு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உட்பட மத்திய தேர்வாணைய தேர்வுகளுக்கான முழுநேர பயிற்சி; இந்திய பொது நிர்வாக நிறுவன புதுவை கிளை அறிவிப்பு

author-image
WebDesk
New Update
jobs

பிரதிநிதித்துவ படம் (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - விஷால் ஸ்ரீவஸ்தா)

இந்திய பொது நிர்வாக நிறுவன புதுவை கிளை சார்பில், மத்திய தேர்வாணைய தேர்வுகளுக்கு பயிற்சி பெற பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய பொது நிர்வாக நிறுவன புதுவை கிளை தலைவர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இதையும் படியுங்கள்: நுழைவுத் தேர்வு இல்லாமல் ஆன்லைன் டிகிரி கோர்ஸ்: சென்னை ஐ.ஐ.டி வழங்கும் வாய்ப்பு என்ன?

இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் கிளை புதுவை ஏவஷ் வீதியில் உள்ளது. இந்த நிறுவனத்தில் புதுவையில் உள்ள அரசு ஊழியர்கள், பொது நிர்வாகம், மாநில, மாவட்ட கிராம பஞ்சாயத்து நிர்வாகம், சட்டம், நடைமுறை, மேலாண்மை, ஆளுமை பற்றி பயிற்சி அளித்து வருகிறது. மத்திய தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் கடந்த 15 ஆண்டாக பயிற்சி அளித்து வருகிறது.

publive-image

இந்திய பொது நிர்வாக நிறுவன புதுவை கிளை தலைவர் தனபால்

இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 3 ஆண்டு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உட்பட மத்திய தேர்வாணைய தேர்வுகளுக்கான முழுநேர பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்த விளக்கம் பெறும் தகவல் முகாம் வரும் 20, 21ம் தேதிகளில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த முகாமில் பங்கேற்க விரும்பு மாணவர்கள், பெற்றோர்கள், 19 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

நேரில் வரும்போது பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் பள்ளி அடையாள அட்டை நகல், மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்து வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு 93450 09639 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry Upsc Civil Service Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment