/indian-express-tamil/media/media_files/2024/12/07/oqcrwZO0UI1IpFc3RwsO.jpg)
புதுச்சேரி நவோதயா பள்ளியில் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பிக்க வரும் அக்டோபர் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜவகர் நவோதயா வித்யாலயா முதல்வர், கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
புதுச்சேரி, காலாப்பட்டில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ், ஜவகர் நவோதயா வித்யாலயா இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பில் (அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில்) உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக, நடத்தப்பட்ட தெரிவுநிலை தேர்வின் அடிப்படையில், மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான, கடைசி தேதி செப்டம்பர் 23 என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, வரும் அக்டோபர் 7 ஆம் தேதி வரை, விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்களின் பெற்றோர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.