புதுச்சேரி மாப்-அப் கலந்தாய்வு; நாளைக்குள் விருப்ப பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்: சென்டாக் தகவல்

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாப்-அப் கலந்தாய்விற்கு விருப்பப் பாடங்களை தேர்வு செய்யலாம்.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாப்-அப் கலந்தாய்விற்கு விருப்பப் பாடங்களை தேர்வு செய்யலாம்.

author-image
WebDesk
New Update
Puducherry Mop Up Round NEET UG Counselling 2025 CENTAC Tamil News

மாப்-அப் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் புதிதாக விருப்ப பாடங்களை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்குள் தேர்வுசெய்ய வேண்டும்.

புதுச்சேரியில் நீட் அல்லாத கலந்தாய்வை சென்டாக் நடத்தி வருகிறது. 3-வது கட்ட இளநிலை பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்த நிலையில் தொழிற்படிப்புகளான பி.டெக்., பி.எஸ்சி., வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, கால்நடை மருத்துவம் (புதுச்சேரி மாணவர்கள் மட்டும்), பி.எஸ்சி., நர்சிங் மற்றும் துணை மருத்துவ படிப்புகள், பி.ஏ.எல்.எல்.பி. (5 ஆண்டுகள்) ஆகிய படிப்புகளுக்கு புதுச்சேரியில் உள்ள 6 அரசு மற்றும் அரசு உதவி பெறும் சமுதாய கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான மாப்-அப் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. 

Advertisment

அதன்படி, மாப்-அப் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் புதிதாக விருப்ப பாடங்களை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்குள் தேர்வுசெய்ய வேண்டும். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாப்-அப் கலந்தாய்விற்கு விருப்பப் பாடங்களை தேர்வு செய்யலாம். முதலில் ஜே.இ.இ. தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும். பின்னர் காலியாக உள்ள இடங்களுக்கு பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும். இந்த தகவலை புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: