புதுச்சேரி காவல்துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் 53 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது
புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 53 பணியிடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இதற்கான எழுத்துத்தேர்வு வருகிற 22-ந் தேதி நடக்கிறது. தொடர்ந்து 24-ந் தேதி பரைட் தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வை சீனியாரிட்டி அடிப்படையில் 29 உதவி ஆய்வாளர்களும், 178 தலைமை காவலர்களும் தேர்வு எழுத உள்ளனர். இந்த தகவலை புதுச்சேரி காவல்துறை தலைமையக காவல் கண்காணிப்பாளர் சுபம் கோஷ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“