புதுச்சேரியில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 7 முதல் புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்குத் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
புதிய அட்டவணைப்படி காலை 9.15 - 9.30 வரை வழிபாடு, 9.30 - மதியம் 12.25 வரை 3 பாடவேளைகள் நடக்கும். காலை 11- 11.10 வரை இடைவேளை, மதியம் 12.40- 1.30 வரை மதிய உணவு இடைவேளை விடப்படும். மதியம் 1.30- மாலை 4.20 வரை 4 பாடவேளைகள், மதியம் 2.50- மாலை 3 மணி வரை இடைவேளை விடப்படும் என மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“