புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் உள்ள அரசு மருத்துவ மனைகளில் ஒப்பந்த செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதாரப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: இன்ஜினியரிங், டிப்ளமோ படிக்கும் பெண்களுக்கு ரூ.50000; பிரகதி ஸ்காலர்ஷிப் பற்றிய முழுவிவரம் இங்கே!
செவிலியர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 31
கல்வித் தகுதி : Diploma in GNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2023/05/2023051666.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி : துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை – 622001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.05.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2023/05/2023051666.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.