/indian-express-tamil/media/media_files/2025/05/30/LipD43VThgEKGSt39gJz.jpg)
Quarterly holiday Special classes ban School Education Department
சென்னை: தமிழகப் பள்ளி மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் (Special Classes) நடத்தக் கூடாது எனப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தனியார் பள்ளிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகப் பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் காலாண்டுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான காலாண்டுத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் (செப். 26) முடிவடைகின்றன.
தேர்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு நாளை (செப். 27) முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 6 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.
சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை
இந்நிலையில், விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்குக் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனப் பள்ளிக் கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us