/indian-express-tamil/media/media_files/RqQpdgnbJd9f2ZoHGqhK.jpg)
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் 12- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வரும் மையங்களை பார்வையிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 12- ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 6,698 மாணவர்களும், 7,500 மாணவிகளும், தனித்தேர்வர்கள் 280 பேரும் என மொத்தம் 14,478 மாணவ - மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு 160 மையங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்று வந்த அரசு பொதுத்தேர்வு மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வரும் மையங்களை பார்வையிட்டதுடன், கண்பார்வையற்ற மாணவி தேர்வு எழுதி வருவதை பார்வையிட்டு உதவியாளர் உரிய உதவிகளை வழங்கி நல்ல முறையில் தேர்வு எழுதிட உறுதுணையாக இருந்திட வேண்டுமென தெரிவித்தார்.
மேலும் அவர், 'அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் போதிய பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள்' என்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.