Advertisment

ராமநாதபுரம்: ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்; திருச்சி மண்டல அதிகாரி விளக்கம்

இந்திய ராணுவம் ஜீனியர் கமிஷன் அதிகாரிகள் / பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றங்களை அறிவித்துள்ளது என்று திருச்சி மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் தீபக்குமார் கூறியுள்ளார்.

author-image
WebDesk
Mar 18, 2023 18:22 IST
Ramanathapuram: INDIAN ARMY RECRUITMENT OFFICER PRESS MEET Tamil News

INDIAN ARMY RECRUITMENT OFFICER PRESS MEET held in Ramanathapuram

Ramanathapuram News in Tamil: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று திருச்சி மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் தீபக்குமார் செய்தியாளர் சந்தித்து பேசினார். அவர் கூறியது பின்வருமாறு:-

Advertisment

இந்திய ராணுவம் ஜீனியர் கமிஷன் அதிகாரிகள் / பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. முதல் கட்டத்தில் joinindianarmy.nic.in (இந்திய ராணுவத்தில் சேரவும்) இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் பொது நுழைவுத்தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இரண்டாம் கட்டத்தில், பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அந்தந்த இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகங்களால் தீர்மாணிக்கப்பட்ட இடங்களில் ஆட்சேர்ப்பு முகாம்களுக்கு அழைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் உடல்தகுதி சோதனைகள் மற்றும் உடல் அளவீட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இறுதியாக மூன்றாம் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் முகாம் நடைபெறும் இடத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இந்திய ராணுவத்தில் சேர இணையதளத்தில் ஆன்லைன் பதிவு 20.03.2023 வரை திறந்திருக்கும். புதிவு செய்யும் செயல்முறை முந்தையதைப்போலவே உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் அட்டை அல்லது பத்தாம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்யலாம். தொடர்ச்சியான ஆட்டோமேஷனின் ஒரு பகுதியாக, இந்திய ராணுவத்தில் சேரவும் இணையதளம் இப்போது அதிக வெளிப்படைத்தன்மைக்காக டிஜிலாக்கருடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் 176 இடங்களில் நடத்தப்படுகிறது. தேர்வர்களுக்கு 5 தேர்வு இடங்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுகள் உள்ளன. மேலும் அந்த தேர்வுகளில் இருந்து அவர்களுக்கு தேர்வு இடங்கள் ஒதுக்கப்படும். ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு கட்டணம் ஒரு நபருக்கு ரூபாய். 500/. இதில் 50 சதவீதம் செலவை இராணுவம் ஏற்றுக்கொள்கிறது. பதிவு செயல்முறையின் முடிவில் விண்ணப்பதாரர்கள் ஒரு கட்டண போர்ட்டலுக்கு அனுப்பப்படுவார்கள்.

இண்டர்நெட் பேங்கிங், UPI/BHIM அல்லது அனைத்து முக்கிய வங்கிகளில் கிரெடிட் அல்லது டெபிட் Maestro, Master Card, அல்லது VISA RuPay கார்டுகள் இருந்தால் அதனை விண்ணப்பதாரர்கள் அதனுடன் தொடர்புடைய வங்கி கட்டணங்களுடன் ரூ.250/ செலுத்தவேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் டெபிட் கார்டுகளை செயல்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள்.

ஒரு விண்ணப்பதாரர் தனது பணம் செலுத்துதல், வெற்றி அடைந்ததுடன் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாக கருதப்படுவார்கள். மேலும் இந்த கட்டத்தில் ஒரு ரோல் எண் உருவாக்கப்படும். இது எல்லா நேரங்களிலும் பயன்படுத்தப்படும். விண்ணப்பிப்பது தொடர்பாக JoinIndianArmy இணையதளத்திலும், யூடியூப்பிலும் உள்ளது. ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வில் தோன்றுவதற்கு, தேர்வு தொடங்குவதற்கு 10-14 நாட்களுக்கு முன்னதாக இந்திய ராணுவத்தில் சேர இணையதளத்தில் அனுமதி அட்டைகள் கிடைக்கும்.

குறுகிய செய்திகள் சேவை (எஸ்.எம்.எஸ்) மூலமாகவும் , அவர்களின் பதிவு மின்னஞ்சல் ஐடிகள் மூலமாகவும் விண்ணப்பதாரர்களின் மொபைல்களுக்கு இதைப் பற்றிய தகவல் அனுப்பப்படும். அட்மிட் கார்டில் தேர்வு மையத்திற்கான சரியான முகவரி இருக்கும்.

ஆன்லைன் CEE என்பது கணினி அடிப்படையிலான தேர்வு. தேர்வில் தோன்றுவதற்கான செயல்முறை மிகவும் எளிமையானது. விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வில் எவ்வாறு தோன்றுவது என்ற வீடியோ இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான இணையதளத்தலும், யூடியூப்பிலும் கிடைக்கிறது. தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வுக்கு தயார் ஆவதற்கு விண்ணப்பதாரர்களுக்கு உதவ, அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சி தேர்வுகள் உருவாக்கப்பட்டு இந்திய ராணுவத்தில் சேரும் இணையதளத்தில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தே மேற்படி தேர்வில் கலந்து கொள்ளலாம். இதை அணுகும் போது விண்ணப்பதாரர்கள் உண்மையான தேர்வின்போது பார்க்கும் அதே திரையை கணிணியில் பார்க்க முடியும்.

ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆட்சேர்ப்பு முகாம்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட இடங்களுக்கு அழைக்கப்படுவார்கள். ஆட்சேர்ப்பு முகாம்களில் நடைமுறை மாறாமல் உள்ளது. இறுதி தகுதியானது ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு முடிவு மற்றும் உடற்தகுதி தேர்வு மதிப்பெண்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த உதவி மையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் இந்திய ராணுவத்தில் சேரும் இணையதளத்தில் உள்ளன. ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு எண்: 79961 57222 என்ற எண்ணில் தெளிவுபடுத்தலாம். இது ஆட்சேர்ப்பு முகாம்களில் கூடும் பெரும் கூட்டத்தை குறைக்கும் மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை குறைக்கும்.

இந்த செயல் முறை மிகவும் நெறிப்படுத்தப்பட்டதாகவும், விண்ணப்பதாரர்கள் தோன்றுவதற்கு எளிதாகவும், நாட்டின் தற்போதைய தொழில் நுட்ப முன்னேற்றத்துடன் ஒத்திசைக்கப்படும். விண்ணப்பதாரர்கள் உணர்ந்துகொள்வது போல இந்த செயல்முறையானது குறைந்த பட்சம் மனித தலையீட்டுடன் முற்றிலும் தானியங்கியாகிவிட்டது. இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முற்றிலும் பக்கசர்பற்ற பாரபட்சமற்ற மற்றும் தகுதி அடிப்படையிலானது.

இவ்வாறு அவர் கூறினார்

இந்த நிகழ்வின் போது உதவி ஆட்சேர்ப்பு அலுவலர் நீலம் குமார் உடனிருந்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Jobs #Tamil Nadu Jobs #Army #Job #Indian Army #Ramanathapuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment