New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/22/tn-govt-jobs-2025-06-22-15-35-37.jpg)
ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு, படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!
ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 20,000
பல்நோக்கு உதவியாளர் (MTS)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 12,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s32723d092b63885e0d7c260cc007e8b9d/uploads/2025/08/17543014423547.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், 4வது தளம், C பிளாக், இராணிப்பேட்டை மாவட்டம் - 632403
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.