Advertisment

ரிசர்வ் வங்கி இன்டர்ன்ஷிப் வாய்ப்பு; தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?

ரிசர்வ் வங்கி வழங்கும் கோடைக்கால வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம்; யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது? முழு விபரங்கள் இங்கே

author-image
WebDesk
New Update
RBI.jpg

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. முதுகலைப் படிப்பைத் தொடரும் மாணவர்களும் ஆர்.பி.ஐ கோடைகால வேலை வாய்ப்பு பயிற்சிக்குப் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள். மேலும், மேலாண்மை, புள்ளியியல், சட்டம், வணிகம், பொருளாதாரம், பொருளாதாரவியல், வங்கி அல்லது நிதி ஆகியவற்றில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் அல்லது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்கள் அல்லது கல்லூரிகளில் சட்டத்தில் மூன்று ஆண்டு முழுநேர தொழில்முறை இளங்கலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: RBI invites applications for summer placements; registration link, eligibility & more

தற்போது படிப்பின் இறுதி ஆண்டில் இருக்கும் மாணவர்கள் மட்டுமே கோடைகால வேலைவாய்ப்பு பயிற்சிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் போது தங்கள் கல்லூரி அல்லது நிறுவனம் அமைந்துள்ள மாநிலத்தை சரியாகக் குறிப்பிடுவதை உறுதிசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் கோடைகால வேலைவாய்ப்புகள் அல்லது பயிற்சிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு உண்மையான மத்திய வங்கிச் சூழலை வெளிப்படுத்தவும், ரிசர்வ் வங்கியின் நிபுணர்கள் மற்றும் வல்லுனர்களின் வழிகாட்டுதலுடன் மத்திய வங்கி தொடர்பாக ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றன.

விண்ணப்பதாரர்கள் ஒரே ஒரு ஆர்.பி.ஐ கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் மற்றும் அவர்களின் கல்லூரி/நிறுவனத்தின் இருப்பிடத்தின்படி ஆர்.பி.ஐ மையத்தில் கோடைகால வேலைவாய்ப்புக்காக பரிசீலிக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிரா/ கோவா/ டாமன் & டையூ/ தாத்ரா & நகர் ஹவேலியில் உள்ள கல்லூரி/ நிறுவனத்தில் படிக்கும் விண்ணப்பதாரர்கள் மும்பை மையத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் rbi.org.in இல் பதிவு செய்யலாம். விண்ணப்பம் அக்டோபர் 15 அன்று தொடங்கியது. கோடைகால பயிற்சி ஏப்ரல், 2025 இல் தொடங்க உள்ளது.

ஆன்லைன் விண்ணப்பத்தின் போது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்கள் அல்லது சான்றிதழ்கள் அல்லது நகல்களை சமர்ப்பிக்கவோ அனுப்பவோ தேவையில்லை. விண்ணப்பத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தகவலின் வலிமையின் அடிப்படையில் அவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். ஏதேனும் ஒரு கட்டத்தில், ஆன்லைன் விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை/ முறைகேடானவை என கண்டறியப்பட்டால் அல்லது ரிசர்வ் வங்கியின் படி, விண்ணப்பதாரர் தகுதியை பூர்த்தி செய்யவில்லை என்றால், அவரது விண்ணப்பம் ரத்து செய்யப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Rbi Reserve Bank Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment