Advertisment

வினாத் தாளை பார்த்து புன்னகை செய்யுங்கள்': யு.பி.எஸ்.சி வெற்றி ரகசியம் கூறும் ஆர்.என் ரவி

நாட்டின் பிரதமர் வித்தியாசமான மனிதர் என்றும் அவர் பல கடினமான சூழல்களை கடந்து வந்துள்ளார் என்று ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
வினாத் தாளை பார்த்து புன்னகை செய்யுங்கள்': யு.பி.எஸ்.சி வெற்றி ரகசியம் கூறும் ஆர்.என் ரவி

நாட்டின் பிரதமர் வித்தியாசமான மனிதர் என்றும் அவர் பல கடினமான சூழல்களை கடந்து வந்துள்ளார் என்று ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை ஐஐடி-யில்  நடைபெற்ற நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என் .ரவி கலந்துகொண்டார். அப்போது மோடி எழுதிய exam warriors என்ற புத்தகத்தின் தமிழ் பிரதியை வெளியிட்டார்.  இதை ஐஐடி இயக்குநர் காமகோடி பெற்றுகொண்டார்.

இந்த நிகழ்வில் ஆளுநர்  பேசியபோது “ பிரத்மர் ஒரு வித்தியாசமான மனிதர். கடினமான  சூழ்நிலை கடந்து வந்துள்ளார். நம் நாடு எங்களை போன்ற அதிகாரிகளால் ஆழப்படவில்லை. உங்களைப் போன்ற மாணவர்களால் இளைஞர்களால் ஆழப்படுகிறது.

உங்களை நீங்கள் நம்ம வேண்டும். ஆலமர விதை பார்ப்பதற்கு சிறியதாக இருக்கலாம். ஆனால் அதுதான் விருட்சமாக வளரும். நீங்கள் உங்களின் தகுதியை உணர்ந்து வளர்ச்சியடைவில்லை என்றால் அது உங்களுக்கு பெரும் இழப்பு. அதுபோல பெற்றோருக்கும் இழப்பு. அதுபோல இந்த நாட்டுக்கும் இழப்பு.

தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது வலியை தருகிறது. நீங்கள் தேர்வு தாளை பார்த்தால் புன்னகை செய்யுங்கள். அது கடினமாக இருந்தால் மேலும் புன்னகை செய்யுங்கள்.  யுபிஎஸ்சி தேர்வில் அதுதான் எனக்கு உதவியது” என்று  அவர் கூறியுள்ளார்.    

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment