அக்டோபரில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் மாணவர்களும் பெற்றோர்களும் பண்டிகைகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டாடத் தயாராகிவரும் நிலையில், அக்டோபர் மாதத்துக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் மாணவர்களும் பெற்றோர்களும் பண்டிகைகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டாடத் தயாராகிவரும் நிலையில், அக்டோபர் மாதத்துக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
holiday in october 2

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அக்டோபர் 2025-க்கான பள்ளி விடுமுறைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அக்டோபர் 2025-க்கான பள்ளி விடுமுறைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்களும் பெற்றோர்களும் பண்டிகைகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டாடத் தயாராகிவரும் நிலையில், இந்த விடுமுறை அறிவிப்பு வந்துள்ளது.

Advertisment

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொண்டாட்டத்துக்கான மாதமாக அமைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில், முக்கியமாக தசரா கொண்டாட்டம், ஆயுத பூஜை, விஜயதசமி/ மகாத்மா காந்தி பிறந்தநாள், தீபாவளி பண்டிகை வருகின்றன. அதனால், இந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள் குடும்பத்துடன் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கும், பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதற்கும் இந்த விடுமுறைகள் அமைந்துள்ளன.

அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ:

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்தில் இந்த நாட்களில் பள்ளிகள் விடுமுறை என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 

அதன்படி, அக்டோபர் 1-ம் தேதி புதன்கிழமை ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவதால், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

அக்டோபர் 2-ம் தேதி வியாழக்கிழமை விஜயதசமி மற்றும் மகாத்மா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்படுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 20-ம் தேதி திங்கள்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் தசரா பண்டிகை, தமிழ்நாட்டின் தென் கடலோரப் பகுதிகளில் தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் கொண்டாடப்படும் இந்த பத்து நாள் தசரா திருவிழா, மாநிலத்தில் மிகவும் கண்கவர் கொண்டாட்டங்களில் ஒன்று. குலசேகரப்பட்டினத்தில் தசரா பண்டிகை செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 3 வரை  விஜயதசமியுடன் நிறைவடைகிறது. உக்கிரமான காளியின் வடிவமான முத்தாரம்மன் தெய்வத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தத் திருவிழா, மாநிலம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு சக்திவாய்ந்த பக்திப் பெருக்காக அமைகிறது.

Schoolholiday

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: