/indian-express-tamil/media/media_files/2025/09/22/dpi-3-2025-09-22-06-13-59.jpg)
இது தொடர்பாக தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் ஆர். சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டிப் பயிற்சித் திட்டத்தின் கீழ், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களின் விவரங்களை வரும் அக்டோபர் 20-ம் தேதிக்குள் கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பான எமிஸ் (EMIS) தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் ஆர். சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் வழங்குவதற்காகப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி, அவர்கள் உயர்கல்வியில் சேருவதை உறுதி செய்கின்றனர்.
இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக, சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவல்கள் எமிஸ் தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள் பதிவு செய்யும் இந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே, எதிர்காலத்தில் இந்த மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் சேர்க்கைக்கான உதவிகள் வழங்கப்படும்.
எனவே, தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் உள்ள வகுப்பாசிரியர்கள் மூலம் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் எமிஸ் தளத்தில் முழுமையாகப் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.