திட்டமிட்டபடி ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் என்று அறிவித்துள்ள பள்ளிக்கல்வித் துறை பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் என்று அறிவித்துள்ள பள்ளிக்கல்வித் துறை பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Corporation schools

பள்ளிகள் திறக்கப்படும் நாளில் இருந்து முழுமையாக மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பள்ளிகளை தயார் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் என்று அறிவித்துள்ள பள்ளிக்கல்வித் துறை பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நாளில் இருந்து முழுமையாக மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பள்ளிகளை தயார் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி வளாகச் சுத்தம்: பள்ளி வளாகம் முழுவதையும் சுத்தப்படுத்தப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், கருப்பு பலகைகளை மையிட்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நன்னெறி வகுப்புகள்: மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை நன்னெறி வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும். இது மாணவர்களின் ஒழுக்க வளர்ச்சிக்கு உதவும்.

Advertisment
Advertisements

விழிப்புணர்வு செயல்பாடுகள்: 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து பேச்சு, கவிதை, துண்டுப் பிரசுரம், சுவரொட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும்.

மதிய உணவு திட்டம்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் சரியானதாகவும், சுகாதாரமானதாகவும், தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மதிய உணவு இடைவேளை: மதிய உணவு இடைவேளை முடிந்து 20 நிமிடங்கள் மாணவர்களை சிறார் பருவ இதழ்களை படிக்க வைக்க வேண்டும்.

ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துவதே இந்த புதிய நெறிமுறைகளின் முக்கிய நோக்கம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tamil Nadu School Education Department

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: