துணை வேந்தர்களுடனான ஆலோசனைக்கு பின் அமைச்சர் பொன்முடி, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
"அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும். 'ஒரே தேர்வு , ஒரே நாளில் முடிவு', ஒரே நாளில் உயர் கல்வி சேர்க்கை ஆகிய அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வரும்.
ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படும்; முதுகலை மாணவர்சேர்க்கையும் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.
அரசை ஆலோசிக்காமல் கவர்னர் தன்னிச்சையாக செய்லபடுகிறார். கவர்னர் உடனான ஆலோசனையில் பங்கேற்பது துணைவேந்தர்களின் சொந்த விருப்பம்.
தேசிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்களையும் மாநில கொள்கையில் கொண்டு வருவோம்", என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil