/indian-express-tamil/media/media_files/fRTTGHClNqn3AIy3w7I9.jpg)
தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் டிச. 1-ம் தேதி வெளியீடு
தமிழக அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்கள் திறனை கண்டறிவதற்காக தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் டிசம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட உள்ளது என்று அறிவிக்கப்படுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் திறனாய்வு தேர்வு எழுதி உதவித்தொகை பெறும் வாய்ப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெறுபவா்களில் 1,500 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்காக, நடப்பு ஆண்டுகான திறனாய்வுத் தோ்வு கடந்த அக்டோபா் 15-ம் தேதி நடைபெற்றது. இந்த தோ்வில் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 880 மாணவா்கள் கலந்து கொண்டனா். இதுதவிர அரசுப் பள்ளி மாணவா்கள் உயா்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் முதல்வர் திறனாய்வுத் தோ்வு நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் ப்ளஸ் 1 மாணவா்களில் ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கல்வி உதவித் தொகையாக இளநிலை பட்டப் படிப்பு வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல்வா் திறனாய்வுத் தோ்வு அக்டோபா் 7-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்கள் திறனை கண்டறிவதற்காக தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் டிசம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.