இந்திய ரயில்வேயில் 1113 அப்ரண்டீஸ் பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ முடித்தவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தென்கிழக்கு ரயில்வேயின் ராய்ப்பூர் பிரிவில் அப்ரண்டீஸ் பயிற்சி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ராய்பூர் DRM அலுவலகத்தில் 844 பணியிடங்கள் மற்றும் ராய்ப்பூரில் உள்ள வேகன் பழுதுபார்க்கும் பிரிவில் 269 பணியிடங்கள் என மொத்தம் 1,113 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.05.2024 கடைசி தேதியாகும். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 1113
காலியிடங்களின் விவரம்
வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்) - 271
டர்னர் - 68
ஃபிட்டர் - 317
எலக்ட்ரீஷியன் - 226
ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்) - 16
ஸ்டெனோகிராபர் (இந்தி) – 9
கணினி இயக்குபவர் / நிரல் உதவியாளர் – 14
சுகாதார ஆய்வாளர் – 25
மெஷினிஸ்ட் – 30
மெக்கானிக்கல் டீசல் – 81
மெக்கானிக்கல் ரெஃப்ரிக் & ஏர் கண்டிஷனர் - 21
மெக்கானிக் ஆட்டோ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் – 35
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ முடித்து இருக்க வேண்டும். கணினி இயக்குபவர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: ஐ.டி.ஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://secr.indianrailways.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.05.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://secr.indianrailways.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“