Advertisment

நீட் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ பதில் மனு; விசாரணை ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு

சென்னை ஐ.ஐ.டி பகுப்பாய்வை குறிப்பிட்டு நீட் தேர்வு வழக்கில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்; விசாரணையை ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
New Update
supreme court

உச்ச நீதிமன்றம் இன்று நீட் தேர்வு (NEET UG) வழக்குகள் விசாரணையை ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையின் (NTA) பதில்கள் இன்னும் சில தரப்பினரால் பெறப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

நீட் தேர்வு வழக்கின் விசாரணையின் போது, மனுதாரர்களின் வழக்கறிஞர் ஜூலை 15 அன்று மனுக்களை பட்டியலிடக் கோரினார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவால் அன்று ஆஜராக முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதை மனதில் வைத்து, “அடுத்த விசாரணை வியாழக்கிழமை (ஜூலை 18) நடைபெறும்” என்று தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியது.

நீட் தேர்வு நடத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து மத்திய புலனாய்வுப் பணியகத்திடம் (CBI) நிலை அறிக்கை கிடைத்துள்ளதாக பெஞ்ச் கூறியது.

சென்னை ஐ.ஐ.டி.,யின் நீட் தேர்வு முடிவுகளின் தரவு பகுப்பாய்வு "அசாதாரணமான மதிப்பெண்களுக்கு வழிவகுத்து பெரிய முறைகேடு அல்லது உள்ளூர்மயமாக்கப்பட்ட வேட்பாளர்கள் பயனடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதைக் காட்டுகிறது" என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இது வந்துள்ளது. 

சந்தேகத்திற்கிடமான வழக்குகளை அடையாளம் காண தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துவதும், முறைகேடு செய்த மாணவர்களை முறைகேடு செய்யாத மாணவர்களிடமிருந்து பிரித்து, பெரிய முறைகேடுக்கான அறிகுறி ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிவதும் சாத்தியமா என்று ஜூலை 8 அன்று உச்ச நீதிமன்றம் கேட்டது.

"நகரம் வாரியாக மற்றும் மைய வாரியாக இரண்டு ஆண்டுகள் (2023 மற்றும் 2024) ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் உள்ளதா என்பதைக் கண்டறிய ஆய்வு செய்யப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை சுமார் 1.1 லட்சமாக இருப்பதால், முதல் 1.4 லட்சம் ரேங்க்களுக்கு இந்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பகுப்பாய்வு, முறைகேடு காரணமாக அல்லது குறிப்பிட்ட தேர்வு மையம் அல்லது நகரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைந்தால், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர் ரேங்க் (முதல் 5%) பெற்றிருந்தால், போன்ற ஏதேனும் அசாதாரணத்தைக் குறிப்பிடும் அளவுக்குத் துல்லியமாக உள்ளது. அசாதாரண மதிப்பெண்களுக்கு வழிவகுத்து, பெரிய முறைகேடு அல்லது உள்ளூர்மயமாக்கப்பட்ட வேட்பாளர்கள் பயனடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை பகுப்பாய்வு காட்டுகிறது,” என்று மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் கூறியது.

"மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் ஒட்டுமொத்த அதிகரிப்பு உள்ளது, குறிப்பாக 550 முதல் 720 வரை. இந்த அதிகரிப்பு பல்வேறு நகரங்கள் மற்றும் மையங்களில் காணப்படுகிறது. பாடத்திட்டத்தில் 25% குறைக்கப்பட்டதே இதற்குக் காரணம். கூடுதலாக, இதுபோன்ற அதிக மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்கள் பல நகரங்கள் மற்றும் பல மையங்களில் பரவி உள்ளனர், இது முறைகேடுக்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என்பதைக் காட்டுகிறது,” என்று பிரமாணப் பத்திரம் கூறியது.

இதற்கிடையில், மாணவர்கள் நீட் கவுன்சிலிங் தேதி குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். ஜூலை மூன்றாவது வாரத்தில் இருந்து நான்கு சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படும் என்றும், ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், கவுன்சிலிங் செயல்பாட்டின் போதும் அல்லது அதற்குப் பிறகும், எந்த நிலையிலும் அந்த நபரின் விண்ணப்பம் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் உட்பட 571 நகரங்களில் 4,750 மையங்களில் 23.33 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் மே 5ஆம் தேதி நீட் தேர்வெழுதினர். எவ்வாறாயினும், இந்த முறை அதிக எண்ணிக்கையிலான டாப்பர்கள், வினாத்தாள் கசிவுகள், தவறான கேள்வி மற்றும் தேர்வு நேரத்தை இழந்ததன் காரணமாக கருணை மதிப்பெண்கள் வழங்குதல் மற்றும் பிற முறைகேடுகளுக்கு இந்த முறை பரவலான எதிர்ப்புகள் எழுந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Supreme Court NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment