/indian-express-tamil/media/media_files/eAFVdUGm6TiHol8CPvoO.jpg)
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஐ.ஐ.டி மெட்ராஸுக்குச் சென்ற பிறகு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று உச்ச நீதிமன்றத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (பட ஆதாரம்: @EduMinOfIndia)
இந்திய நீதித்துறையின் டிஜிட்டல் மாற்றத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்திய உச்ச நீதிமன்றமும், இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸூம் (IIT M) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: Supreme Court, IIT-Madras sign MoU to bring digital transformation of judiciary through AI
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஐ.ஐ.டி மெட்ராஸுக்குச் சென்ற பிறகு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று உச்ச நீதிமன்றத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டாண்மை மூலம், ஐ.ஐ.டி மெட்ராஸ், உச்ச நீதிமன்றத்தின் அன்றாட நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்.
The Supreme Court of India and @iitmadras have signed an MoU aiming at facilitating the digital transformation of the Indian judiciary.
— Ministry of Education (@EduMinOfIndia) October 12, 2023
The MoU outlines provisions for cooperation in the utilisation of artificial intelligence (AI) and emerging technologies in tasks such as… pic.twitter.com/hBDhLFfX79
"சுருக்கம், படியெடுத்தல், மொழிபெயர்ப்பு, நீதிமன்ற விசாரணைகளுக்கான பிரத்யேக ஸ்ட்ரீமிங் தளத்தை உருவாக்குதல், செயல்முறை ஆட்டோமேஷன் மற்றும் சட்டப்பூர்வ டொமைனுக்காக வடிவமைக்கப்பட்ட பெரிய மொழி மாதிரிகளை (LLM) பயன்படுத்துதல் போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் ஒத்துழைப்புக்கான ஏற்பாடுகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கோடிட்டுக் காட்டுகிறது,” என்று கல்வி அமைச்சகம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக, அதன் செயல்முறையை தானியங்கி, பயனர் நட்பு மற்றும் குடிமக்களை மையப்படுத்துவதில் தொழில்நுட்ப மேம்பாட்டை கொண்டு வருகிறது என்று உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.