/indian-express-tamil/media/media_files/2025/08/29/supreme-court-2025-08-29-08-46-56.jpg)
டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Court Master
காலியிடங்களின் எண்ணிக்கை: 30
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 30 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 67,700
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து தட்டச்சுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.sci.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2024
விண்ணப்பக் கட்டணம்: ரூ 1500, எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 750
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.