/tamil-ie/media/media_files/uploads/2020/03/image-13.jpg)
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் (யுஓஎச்) சேர்ந்த ஆசிரியர் ஒருவர், கொரோனா வைரஸுக்கு எதிரான சிறந்த தடுப்பூசியாக கருதப்படும் டி-செல் எபிடோப்ஸ் என்பதை வடிவமைத்துள்ளார்.
ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்சஸ் உயிர் வேதியியல் துறையில் பணி புரியும் சீமா மிஸ்ராவின் இந்த கண்டுபிடிப்பு, அறிவியல் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஹைதராபாத் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட உயிரணுக்களை அழிப்பதற்காக நமது உயிரணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்றன. அப்போது உயிரணுக்கள் பயன்படுத்தப்படுக்கூடிய சிறிய கொரோனாவைரல் பெப்டைடுகள் அல்லது மூலக்கூறுகளை சீமா மிஸ்ரா கண்டறிந்துள்ளார். மனித செல்கள் அல்லது புரதங்களை அழிக்காத வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த முடிவுகளை உறுதிபடுத்த சோதனை ரீதியாக ஆய்வுகள் தேவைப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி வடிவமைப்பு தொடர்பான முதல் ஆய்வுகள் இவைதான். வைரஸின் கட்டமைப்பு/கட்டமைப்பு இல்லாத அனைத்து புரதங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தற்போது வரை, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பதற்கான சிறந்த பாதுகாப்பு தனிமைப்படுத்தல் முறை உள்ளது. டி-செல் எபிடோப்ஸ் பற்றிய படிப்பினை மேலும் தேவைப்படுவதால் தடுப்பூசி தயாராக சிறிது காலம் எடுக்கும்.
இதற்கிடையில், ஐ.ஐ.டி-கவுஹாத்தியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி மருந்தையும், சோதனை கருவியும் உருவாக்கி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.