தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ், கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, வருகின்ற 2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 10ஆம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "தமிழ் கட்டாய மொழியாக மாற்றுவதோடு, அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயமாக கூடுதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்", என்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil